ராகு,கேது பெயர்ச்சி
மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 13.2.19 புதன்கிழமை இரவு,ராகு,கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.ராகுபகவான் கடக ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கும்,கேது பகவான், மகர ராசியிலிருந்து தனுசு
ராசிக்கும் மதியம் 1.25 மணிக்கு
பெயர்ச்சி அடைவதை
முன்னிட்டு இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,நவகிரகங்களில் ராகு, கேதுவிற்கு சிறப்பு அலங்காரமும் செய்விக்கப் பெற்றிருந்தன. தொடர்ந்து நவ கிரகங்களுக்கான கலசங்கள் வைத்து சிறப்பு
யாக பூஜையும் நடைபெற்றது.யாககுண்டத்தில்
அனைவரும் வரிசையாக வந்து வன்னி சமித்து,கொள்.கருப்பு உளுந்து
தானியங்களை போட்டனர்.கலச நீர் நவ கிரகங்களுக்கு தெளித்தபின் அனைவருக்கும்
தெளிக்கப்பட்டது. .ராகு,கேதுவின் அருட்
பார்வை, 12 ராசிகளுக்கான
பெயர்ச்சி பலன்கள் மற்றும் ஏற்ற வேண்டிய தீப எண்ணிக்கைகள் கூறப்பட்டன.பக்தர்களால்
அத் தீபங்கள்
ஏற்றப்பட்டன.சிறப்பு அர்ச்சனையும், மஹா தீபாராதனையும் நடை பெற்றன.இதில் பக்தர்கள்
திரளாகக் கலந்துகொண்டு தரிசித்தனர். ராகு,கேது விற்கான உளுந்து,கொள்ளு சுண்டல்,மற்றும் பல பிரசாதங்கள் வழங்கப்பட்டன.வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய பௌர்ணமி அமாவாசைக்
குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதே போன்று அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர்
கோயிலில் இறைபணி மன்றம் சார்பில் ராகு,கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக
நடைபெற்றது.மங்கலம் சாலையிலுள்ள பச்சை அம்மன் கோயிலிலும் ராகு,கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக
நடைபெற்றது.