மேல்மலையனூர்
வட்டம் அவலூர்பேட்டை,ஊரின் கிழக்கு எல்லையில்
உள்ள காளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன
மகா கும்பாபிஷேகம் 10.2.19 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள்ளாக
சிறப்பாக
நடைபெற்றது.இதைமுன்னிட்டு 9.2.19 காலை 8 மணிக்கு
மங்கள இசை,அனுக்ஜை,கணபதி,லட்சுமி,நவக்கிரக ஹோமங்ககள்,நூதனபிம்பஅஷ்டாத கிரியை,கோபூஜை,சன்ய
பூஜை தீபாராதனை,பிரசாதங்கள் வழங்குதல் நடைபெற்றன.மாலை 5 மணி வாஸ்த்து சாந்தி,பிரவேசபலிமிருத்சங்கிரகணம்,அங்குரார்ப்பணம்,
ரக்ஷாபந்தனம்,கும்ப அலங்காரம்,காலகர்ஷணம்.இரவு 7 மணி முதல் கால யாகபூஜை,யந்திரஸ்தாபிதம்,நவரத்தினஸ்தாபிதம்,வேதபாராயணம்.இரவு
9 மணி பூர்ணாகுதி,மகா தீபாராதனை. அஷ்டபந்தன சர்பனம்,பிரசாதங்கள் வழங்குதல்.10.2.19
ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மங்கள இசை,நாடி சந்தானம்,பர்சாஹூதி,
2 வது கால விசேஷ மூலிகை திரவியம் ஹோமங்கள், மகா பூர்ணாகுதி,மகா தீபாராதனை,மகா பூர்ணாகுதி,மகா
தீபாராதனை,9.30 மணிக்கு தீர்த்த கும்ப புறப்பாடு.10.30 மணிக்கு காளி அம்மன்,காலபைரவர்,
வியாக்கியான தட்சணாமூர்த்தி,மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு கும்பாபிஷேகம்.மூலவர்,காலபைரவர்,தட்சணாமூர்த்தி
கோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பகலச நீர் ஊற்றப்பட்டன.தொடந்து.மகா அபிஷேகம்,
அலங்காரம் செயப்பட்டு அர்சனைகள்செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றன.அனைவருக்கும்
ஐயப்பா சேவா சங்கம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன..உள்ளூர் வெளியூர் பக்தர்கள்
திரளாகக் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை சீனுவாச குருக்கள் அவர்கள் தலமையில் சிவாச்சரியார்கள்
ஆகமமுறைப்படி சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தினர். இன்று முதல் மண்டலாபிஷேக பூஜைகள்
நடைபெறும் என தெரிவித்தனர்.காவல்துறையினரின் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது
மாலை 6 மணிக்குஅங்க்காடி வீதியில்
ககுடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களா? ஆண்களா? என்ற தலைப்பில் நகைச்சுவைப்
பட்டி மன்றம் நடைபெற்றது..நடுவர் ராமலிங்கம் அவர்கள்,.பெண்களே என்றதலைப்பில் செல்வி
தாமரை அவர்கள்,ஆண்களே என்றதலைப்பில்பேராசிரியர் வேதா அவர்கள்,இரவு 8 மணிக்கு காளி அம்மன்
சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.
.விழா நிகழ்வுகளை தலைவர் ராமலிங்கம்,செயலர் நடராஜன்,பொருளர் கோபாலகிருஷ்ணன்,அர்ச்சகர்
சரவணன்,விழாக்குழு மற்றும் கிராம பொது மக்கள் முன்னின்று
சிறப்புற செய்தனர்.



















No comments:
Post a Comment